ஜூன் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!
கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோவில் வைகாசி மாசி திருவிழா காரணமாக அரசு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது.
உள்ளூர் விடுமுறை:
புதுவை யூனியன் பிரதேசத்தில் வில்லியனூரில் பிரசித்தி பெற்ற கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோவில் வைகாசி மாசி திருவிழா நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா ஜூன் 1ம் தேதியான நாளை நடக்க உள்ளது. இதனை முதல்வர் ரங்கசாமி அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார்.
புதிதாக கட்டப்பட்டு வரும் திருப்பதி ஏழுமலையான் கோவில் – தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!
இந்நிலையில், புதுவை தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சித்தலைவருமான சிவா அவர்கள், கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோவில் தேர்திருவிழாவை ஒட்டி அன்றைய தினம் அரசு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
Join Our WhatsApp Group” for Latest Updates