மாநில அரசு விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் வரையிலும் கடன் தள்ளுபடி வழங்கப்படும் நிலையில் யார் யாருக்கு இந்த சலுகைகள் வழங்கப்படும் என்பது குறித்தான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கடன் தள்ளுபடி:
பல்வேறு மாநில அரசுகள் ஏழை, எளிய விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஜார்கண்ட் அரசு கடனை திருப்பி செலுத்த முடியாத விவசாயிகளின் கடனில் இருந்து ரூ. 50,000 வரையிலும் தள்ளுபடி செய்து வருகிறது. அதாவது, விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துதல், புதிய பயிர் கடன் கிடைப்பதை உறுதி செய்தல் உள்ளிட்ட நோக்கத்திற்காக விவசாயிகளுக்கு இதுபோன்ற கடன் தள்ளுபடி சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடன் தள்ளுபடியை பெற விவசாயிகள் ஜார்கண்ட் மாநிலத்தில் நிரந்தர குடியிருப்பாளர்களாக இருக்க வேண்டும்.
மேலும், கிசான் கிரெடிட் கார்டு மூலமாகவே கடன் பெற்ற சிறு மற்றும் குறு விவசாயிகளாக இருக்க வேண்டும். அடுத்ததாக, சொந்த இடத்திலேயே சாகுபடி செய்யும் விவசாயி அல்லது குத்தகைக்கு எடுத்திருக்கும் விவசாயிகளுக்கு இந்த கடன் தள்ளுபடி வழங்கப்படும். மேலும், ஒரு குடும்பத்தில் ஒரு விவசாயிகளுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி சலுகை வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும், 2020 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்கு முன் வங்கியில் கடன் பெற்றவர்களாக இருக்க வேண்டும். அதற்குப் பின்பாக வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு இந்த தள்ளுபடி பொருந்தாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.