மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கவில்லையா? வீடு தேடி வர இருக்கும் ஊழியர்கள்!

0
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கவில்லையா? வீடு தேடி வர இருக்கும் ஊழியர்கள்!
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கவில்லையா? வீடு தேடி வர இருக்கும் ஊழியர்கள்!
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கவில்லையா? வீடு தேடி வர இருக்கும் ஊழியர்கள்!

மின் இணைப்புடன் ஆதாரை கட்டாயமாக இணைக்க வேண்டும் என மின்வாரிய துறை அறிவித்திருக்கிறது. இந்நிலையில், ஆதாரை இணைக்காதவர்களின் வீட்டிற்கே ஊழியர்கள் நேரில் சென்று அறிவுறுத்த இருக்கின்றனர்.

மின் இணைப்பு:

தமிழகத்திற்கு வீடுகள், விவசாயம் என மொத்தமாக 2.67 கோடி மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த மின் இணைப்புகள் அனைத்தையும் சரியான முறையில் ஒழுங்குபடுத்துவதற்காக கட்டாயமாக மின் இணைப்புடன் பொதுமக்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம்களும் கடந்த சில மாதங்களாக நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், பிப்ரவரி மாதத்துடன் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலம் நிறைவடைந்த நிலையில் 2 கோடியே 60 லட்சம் பொதுமக்கள் ஆதார் எண்ணை இணைத்திருக்கின்றனர். ஆனால், 67 ஆயிரம் பொதுமக்கள் தற்போது வரையிலும் ஆதார் எண்ணை இணைக்காமலேயே இருக்கின்றனர். இதனால், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருப்பவர்களின் வீடுகளுக்கு மின்வாரிய ஊழியர்கள் நேரில் சென்று மின் இணைப்பு பணிகளை செய்யுமாறு அறிவுறுத்த இருக்கின்றனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!