தமிழக பால் கொள்முதல் விலை உயர்வு விவகாரம் .. நாளை பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்!
தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் வைத்து வரும் நிலையில், நாளை (மார்ச் 16) திட்டமிட்டபடி பால் நிறுத்த போராட்டம் நடைபெறும் என பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்
போராட்டம் அறிவிப்பு
தமிழகத்தில் தனியார் பால் உற்பத்தி நிலையங்கள் பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் விலையாக ரூ.42 வரை கொடுத்து பாலை கொள்முதல் செய்கின்றன. ஆனால் ஆவினில் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து ரூ.31லிருந்து ரூ 2 மட்டும் உயர்த்தி ரூ.33க்கு பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதனால் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் தொடர்ந்து கோரிக்கை வைத்தது.
இது குறித்து பால் உற்பத்தியாளர்கள் கூறுகையில் கால்நடைகளின் தீவனம், பராமரிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பால் விலையை உயர்த்த வேண்டும் என தெரிவித்தனர். இந்நிலையில் இது குறித்து அமைச்சர் நாசருடன் பால் உற்பத்தியாளர் சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தற்போது நாளை (மார்ச் 17) முதல் பால் நிறுத்த போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். மேலும் ஆவினுக்கு பால் வழங்க போவது இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.