LIC அறிமுகப்படுத்திய புதிய ஸ்மார்ட் பென்ஷன் திட்டம் – முழு விவரங்களுடன்!
சேமிப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் தொடர்ந்து அதிகரித்து வரும் விலையேற்றத்தின் காரணமாக சேமிப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இருப்பினும் மக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க பல்வேறு சேமிப்பு திட்டங்கள் அமலில் உள்ளன. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) ஆனது பல்வேறு பாலிசி திட்டங்கள் வழங்கி வருகிறது. தற்போது புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
மியூச்சுவல் பண்ட் மூலம் கோடீஸ்வரர் ஆக முடியுமா? கட்டாயம் முடியும் தெரிஞ்சுக்கோங்க!
இந்த ஸ்மார்ட் ஓய்வூதிய திட்ட பாலிசியை குறைந்தபட்சம் ரூ.1,00,000 செலுத்தி வாங்கலாம். அதிக தொகைக்கு வாங்கினால் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மேலும், வருடாந்திர கொடுப்பனவு முறைகள், ஆண்டு, அரையாண்டு, காலாண்டு அல்லது மாதாந்திரம் என உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பெற்றுக்கொள்ளும் வசதிகள் உள்ளன.சந்தாதாரர்கள் 5 ஆண்டுகளுக்கு பிறகு, முதலீடு செய்த தொகையில் 60 சதவீதம் வரை திரும்ப எடுக்கலாம். பாலிசி எடுத்த 3 மாதங்களுக்கு பிறகு சந்தாதாரர்கள் அதன் வாயிலாக கடன் பெறும் வசதியும் உள்ளது.
























