LIC ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, சனிக்கிழமை விடுமுறை – அறிவிப்பு!!
தமிழகத்தில் பணியாற்றி வரும் எல்ஐசி ஊழியர்கள், வாரம் தோறும் சனிக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்ததை தொடர்ந்து, அவர்களுக்கு தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை விடுமுறை
தமிழக LIC நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் வாரத்தில் 6 நாட்களும் பணி செய்து வருவதால், சனிக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். அதன் படி இன்று (மே 10) முதல் LIC நிறுவனத்தின் அனைத்து அலுவலகங்களும், திங்கள் முதல் வெள்ளி வரை இயங்கினால் போதும் எனவும் சனிக்கிழமை அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இது குறித்து, அனைத்து LIC பாலிசிதாரர்களுக்கும், பிற பங்குதாரர்களுக்கும் அந்நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது தவிர வாரம் தோறும் திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரை அலுவலகம் இயங்கும் நேரம் காலை 10 மணி முதல் மாலை 5:30 மணி வரை என அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர LIC நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் 1.14 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள் என கூறப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டும் பருவத்தேர்வு – அமைச்சர் அறிவிப்பு!!
கூடுதலாக அனைத்து LIC ஊழியர்களுக்கும், மத்திய அரசு ஊதியத்தை உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் படி LIC ஊழியர்களுக்கான இந்த ஊதிய உயர்வு 15% முதல் 16% அல்லது 20% வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வங்கி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வுக்கு ஏற்ப LIC ஊழியர்களின் ஊதிய உயர்வும் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.