அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டும் பருவத்தேர்வு – அமைச்சர் அறிவிப்பு!!
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டும் பருவத்தேர்வு நடத்தப்படுவது குறித்து தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார்.
செமஸ்டர் தேர்வுகள்:
கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு மாணவர்களுக்கு தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டது. அந்த முறைப்படியே இந்த ஆண்டும் மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெற்றது. ஆனால் இத்தேர்வுகளில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதனால் பல தரப்பட்ட மாணவர்களுக்கு சிக்கல்கள் இருந்தன. மேலும் இதனால் அதிகப்படியான மாணவர்களுக்கு மதிப்பெண்களும் குறைந்தன.
தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அதிகாரிகள் வெளியீடு!!
இதனால் பல்கலைக்கழக தேர்வுகளை தமிழகத்தில் மீண்டும் நடத்துவது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களும் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர்.
TN Job “FB Group” Join Now
இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டும் பருவத்தேர்வு நடத்தப்பட முடிவு செய்துள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இத்தேர்வுகள் ஆன்லைன் மூலம் மூன்று மணி நேரம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்து உள்ளார்.
மேலும் தேர்வுக்கான கட்டணத்தை மாணவர்கள் செலுத்த தேவையில்லை என்றும், ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களும் அதிக மதிப்பெண் பெற விரும்பினால் தேர்வு எழுதலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மாணவர்கள் தேர்வு எழுதினால் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று உள்ளார்களோ அதுவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. ஆன்லைன் நடத்தப்பட உள்ள இந்த தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.
தேர்வு கட்டணம் செலுத்த இயலாமல் தேர்வு எழுத முடியாதவர்கள், இப்பொழுது தேர்வு கட்டணம் செலுத்தி தேர்வு எழுதலாமா