தமிழகத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு விடுமுறை – தொடக்கக் கல்வி இயக்குனருக்கு கடிதம்!

0
தமிழகத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு விடுமுறை - தொடக்கக் கல்வி இயக்குனருக்கு கடிதம்!
தமிழகத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு விடுமுறை - தொடக்கக் கல்வி இயக்குனருக்கு கடிதம்!
தமிழகத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு விடுமுறை – தொடக்கக் கல்வி இயக்குனருக்கு கடிதம்!

தமிழகத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஈட்டா (மருத்துவ) விடுப்புக்கு ஈட்டிய விடுப்பு கழிப்பது குறித்து விரைந்து செயல்முறை வெளியிடப்படும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாநில அமைப்பு தொடக்கக் கல்வி இயக்குனருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

விடுப்பு அறிவிப்பு

தமிழகத்தில் தொடக்கக்கல்வி விடுப்பு குறித்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் விடுப்பு இருப்பினை செயலியில் பதிவேற்றம் செய்வது, அரசின் விடுப்பு விதிகளின் படி ஆசிரியர்களின் விடுப்பு இருப்பு கண்டறிதல் குறித்து தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது. அதில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் அனைத்து வகை விடுப்பு இருப்புச்சான்று பணிப் பதிவேட்டு விடுப்பு பதிவு நகலுடன் வழங்கப்படல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை காலத்தில் மழலையர் பள்ளிகள் மூடல்? – அரசு நடவடிக்கை!

மேலும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொண்டுள்ள ஊதியம் இல்லா விடுப்புக்கு மட்டுமே ஈட்டிய விடுப்பு கழிக்கப்படுவதை உறுதிப்படுத்திடல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்றிய அளவில் பணிப்பதிவேடு சரிபார்த்தல் சார்ந்து கலந்தாய்வு கூட்டம் மீண்டும் விரிவான அளவில் நடத்தப்பட வேண்டும் எனவும், பணிப்பதிவேட்டு பதிவுகள் வட்டாரக்கல்வி அலுவலர்களால் செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடக்கக்கல்வி இயக்குனர் ஆசிரியர்களின் விடுப்பு சார்ந்த கோரிக்கைகளின் மீது நேரடித் தலையீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!