ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – அட்டையில் செல்லிடப்பேசி எண் சரியாக உள்ளதா? அப்டேட் தகவல்!

0
ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - அட்டையில் செல்லிடப்பேசி எண் சரியாக உள்ளதா? அப்டேட் தகவல்!
ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - அட்டையில் செல்லிடப்பேசி எண் சரியாக உள்ளதா? அப்டேட் தகவல்!
ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – அட்டையில் செல்லிடப்பேசி எண் சரியாக உள்ளதா? அப்டேட் தகவல்!

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் மிகவும் நம்பத்தகுந்த, பாதுகாப்பான நடைமுறைகளுடன் கூடிய அடையாள அட்டையாக ஆதார் அட்டை உள்ளது. இந்த அட்டையில் உள்ள விவரங்கள் குறித்து முக்கிய அறிவிப்பை ஆதார் அமைப்பு வெளியிட்டு உள்ளது.

அப்டேட் தகவல்:

இந்திய நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவான ஓர் அடையாள அட்டையை வழங்க அப்போதைய காங்கிரஸ் அரசு முடிவெடுத்தது. இதற்கான பணிகள் நடந்து வந்த நிலையில், அடுத்து ஆட்சிக்கு வந்த பா.ஜ.க அரசு, `ஆதார் அட்டை’யைக் கட்டாயமாக்கும் முயற்சியில் முனைப்பு காட்டியது. இந்திய குடிமக்கள் அனைவருக்கும் பொதுவான ஓர் அடையாள அட்டையாகக் கருதப்படுகிறது ஆதார் அட்டை. அரசின் நலத்திட்டங்களைப் பெறுவதற்கும், பல்வேறு ஆவணங்களைப் பெறுவதற்கும், பல்வேறு ஆவணங்களுக்கு மாற்றாகவும் ஆதார் அட்டை பயன்படுகிறது. இந்த அட்டையால், ஒருவர் பெயரை மற்றொருவர் பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடுவது தவிர்க்கப்படும்.

மதுரையில் நாளை (மார்ச் 25) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இதனால், அரசின் நலத்திட்டங்கள் உரிய பயனாளர்களுக்குச் சென்று சேர்வது உறுதிப்படுத்தப்படுவதுடன், உரிய பயனாளர்களை எளிதில் அடையாளம் காணவும் முடியும். இந்திய தனிநபர் அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்படும் ஆதார் அட்டை 12 இலக்க எண்களைக் கொண்டது. குடியுரிமைக்கான சான்றாகப் பயன்படுத்த வழிவகை செய்யும் ஆதார் அட்டையானது, ஒருவரின் வாழ்நாள் முழுக்க செல்லுபடியாகும். இந்த ஆதார் அட்டையில் ஒரு தனி நபரின் பல விவரங்கள் இடம்பெற்றிருக்கும். இந்த விவரங்கள் அனைத்துமே மிகச் சரியாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.

ஒரு நபரின் பெயர், வயது, முகவரி, புகைப்படம், செல்லிடப்பேசி எண் உள்ளிட்ட பல விவரங்கள் இதில் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் தவறாக இருந்தால், அதை மாற்ற அரசு இ – சேவை மையங்களுக்கு நேரில் சென்றோ அல்லது உரிய ஆவணங்களை இணைத்து இணையதளம் மூலமாகவோ திருத்திக் கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதில் மற்ற விவரங்கள் சரியாக இல்லையென்றாலும் கூட, ஒரு நபர் தனது ஆதார் அட்டையில் இருக்கும் செல்லிடப்பேசி எண்ணை சரியாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். எனவே ஒவ்வொரு குடிமகனும் ஆதார் அட்டையில் உள்ள செல்லிடப்பேசி எண் சரியாக இருக்கிறதா? என்பதை சரிபார்த்து கொள்ள வேண்டும் என ஆதார் அமைப்பு வலியுறுத்துகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!