மதுரையில் நாளை (மார்ச் 25) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனை அருகே உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (மார்ச் 25) காலை 10 மணி முதல் மதியம் 12 வரை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்பட இருப்பதாக மின் வாரியம் சார்பில் அறிவித்து உள்ளனர்.
மின்தடை:
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாதம்தோறும் மின் கசிவு மற்றும் மின் கோளாறு காரணமாக சாலைகளிலும் ஒரு சில இடங்களில் எக்கச்சக்கமாக விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. மேலும் மின் இணைப்பு கம்பிகளில் ஏற்படும் பிளவு காரணமாக விபத்துகள் ஏற்படுகிறது. அதனால் தமிழக அரசு மின் வாரியத்தின் சார்பில் இவ்வாறு விபத்துகள் நடைபெறாமல் கண்காணித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழக அரசு மின் பராமரிப்பு பணிகளை முறையாக மாதந்தோறும் செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மின் வாரியம் சார்பில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
TNPSC மாதம் ரூ.56000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்கள் மட்டுமே!
இந்நிலையில் நாளை மதுரை மாவட்டத்தில் மின்தடை ஏற்பட்ட இருப்பதாக மின் வாரியத்தின் சார்பில் கூறப்பட்டு உள்ளது. மேலும் அத்துடன் சேர்ந்து மின்தடைக்கான நேரமும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை உயரழுத்த மின் கம்பிகள் மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற உள்ள காரணத்தால் மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.
மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள், ஷெனாய் நகர், ராமையா தெரு, வைத்தியநாதய்யர் தெரு, கக்கன் தெரு, சிவசண்முகம் பிள்ளை வீதி, ஜெகஜீவன் ராம் தெரு, புளியன்தோப்பு, வைகை வடகரை, திருவேங்கடபுரம், கல்பாலம் சாலை, பனகல் சாலை ஆகிய இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப் பட உள்ளது. அதனை தொடர்ந்து பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகம் செய்யப்படும் என்றும் மின்வாரியம் தெரிவித்து உள்ளது.