Post Office இல் மாதம் ரூ.10000 முதலீடு செய்வதால் ரூ.16 லட்சம் வரை ரிட்டன்ஸ் – சூப்பரான சேமிப்பு திட்டம்!
இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்கள் உள்ளன. இதில் முதலீடு செய்வதால் வங்கிகளை காட்டிலும் அதிகளவு லாபத்தை பெற முடிகிறது. இதில் தொடர் வைப்புத் திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம் மற்றும் முதிர்வு தொகை குறித்த தகவல்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
தொடர் வைப்புத் திட்டம்:
இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது இந்த சேமிப்பு திட்டத்தில் ஏராளமானோர் இணைந்து வருகின்றனர். ஏனெனில் அஞ்சல் சேமிப்பு திட்டத்தில் வங்கிகளை காட்டிலும் அதிகளவு வட்டி தொகையை பெற முடிகிறது. அத்துடன் குறைந்தபட்சமாக ரூ.100 முதல் செலுத்தி சேமிப்பு கணக்கை தொடங்கலாம். அதனால் சாதாரண மக்கள் கூட இந்த சேமிப்பு திட்டங்களில் இணைய முடிகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் அஞ்சல் அலுவலகம் இயங்கி வருவதால் 100% முழு பாதுகாப்பு கிடைக்கிறது.
மேலும் இந்த சேமிப்பு திட்டத்தின் கீழ் சேமிக்கப்படும் தொகையானது கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதனை தொடர்ந்து தொடர் வைப்பு நிதி திட்டத்தில் ஆண்டுக்கு 5.8% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக 100 ரூபாய் முதல் செலுத்தி சேமிப்பு கணக்கை தொடங்கலாம். அத்துடன் அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானலும் செலுத்தி கொள்ளலாம். இதில் குறைந்தபட்சமாக 5 ஆண்டுகளாவது முதலீடு செய்ய வேண்டும். இதில் மாதந்தோறும் தவணை தொகையை செலுத்த வேண்டும்.
ஓய்வு பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு – ரூ.1,42,000/- வரை ஊதியம்
மேலும் தவணைத் தொகையை மாதந்தோறும் செலுத்தவில்லையென்றால் அபராதம் விதிக்கப்படும். இதில் வட்டி தொகையானது ஒவ்வொரு காலாண்டுக்கும் கணக்கிடப்படுகிறது. இதில் சேமிப்புதாரர் மாதந்தோறும் ரூ.10000யை செலுத்தி வருகிறார். அதன்படி இதில் 10 ஆண்டுகளுக்கு 12 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். முதிர்வு காலத்தின் முடிவில் வட்டி விகிதம் கணக்கிடப்பட்டு 16 லட்சம் வரை கிடைக்கிறது. இதில் 4 லட்சம் வரை வட்டி கிடைக்கிறது. அதனால் பொதுமக்கள் மத்தியில் இந்த திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.