மத்திய பட்ஜெட் 2021 – கல்வித்துறை பற்றிய 8 அறிவிப்புகள்!!
2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கல்வித்துறையில் சில புதிய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த போவதாக அறிவிப்பு வெளியிட்டார்.
கல்வித்துறை அறிவிப்பு:
1. இந்தியா முழுவதும் 100 சைனிக் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார். தற்போது வரை நாடு முழுவதும் 28 பள்ளிகள் உள்ள நிலையில் தற்போது கூடுதல் பள்ளிகள் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
2.லே பகுதியில் புதிய மத்திய பல்கலைகழகம் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்களின் கல்வி வளர்ச்சி மேம்பட வழிவகை செய்கிறது.
கடலூரில் பிப்ரவரி 7 ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!
3. இந்தியாவில் உள்ள மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கல்வி வளர்ச்சியை மேம்படுத்த அவர்கள் வசிக்கும் பகுதிகளில் 750 புதிய ஏகலையா பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்ககளில் பயிலும் மாணவர்களில் உள்ள ஆதிதிராவிட மாணவர்களுக்கு அடுத்த 6 ஆண்டுகள் உதவித்தொகை வழங்க ரூ.35219 கோடி ருபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
5. இந்தியாவில் உள்ள 15 ஆயிரத்திற்கு மேம்பட்ட பள்ளிகள் தேசிய கல்வி கொள்கையின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது.
6. இந்தியாவில் புதிதாக 100 ராணுவ பள்ளிகள் திறக்கப்படும்.
7. திருத்தியமைக்கப்பட்ட கல்வி உதவித்தொகை திட்டத்தின் மூலம் 10 ஆம் வகுப்பு ஆதிதிராவிட மாணவர்களுக்கு அதற்கு பின் படிக்கும் மேற்படிப்புகளுக்கான உதவித்தொகை வழங்கப்படும்.
8. அடுத்த 5 ஆண்டுகளில் தேசிய ஆராய்ச்சி மையம் சார்பில் ரூ.50000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்