1.74 லட்சம் மாணவர்கள் முதுகலை நீட் தேர்வுக்கு விண்ணப்பம் – தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு!!
2021 முதுகலை நீட் தேர்வுக்கு நடப்பு ஆண்டில் 1.74 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
நீட் தேர்வு:
நீட் தேர்வு மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதி தேர்வாகும். இந்தியாவில் இளங்கலை, முதுகலை, பல் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்காக நீட் தேர்வு தேசிய தேர்வுகள் மையத்தினால் நடத்தப்படுகிறது. நீட் நுழைவுத்தேர்வு தான் இந்தியாவில் நடத்தப்படும் மிகப்பெரிய தேர்வாகும். கடந்த ஆண்டு 16 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வில் கலந்து கொண்டனர்.
40% செமஸ்டர் படிப்புகளை ஆன்லைனில் கற்கலாம் – யுஜிசி உத்தரவு!!
முதுநிலை நீட் தேர்வு:
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு மொத்தம் 30,000 இடங்கள் உள்ளது. முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு பற்றிய அறிவிப்பு முன்னதாக வெளியிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 15ம் தேதி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டது. முதுநிலை நீட் தேர்வுகள் ஏப்ரல் 18ம் தேதி அன்று நடக்க இருக்கிறது. தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகளை ஏப்ரல் 12ம் தேதி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பம்:
முதுநிலை நீட் தேர்வுக்கு கொடுத்துள்ள கால அவகாசத்தில் 1,063 மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாமல் உள்ளதை அறிந்த தேர்வு வாரியம் மீண்டும் மார்ச் 28 முதல் மார்ச் 30ம் தேதி வரை அவர்கள் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கியது. அதன்படி, இதுவரை முதுநிலை நீட் தேர்வுக்கு 1.74 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வு குறித்த அதிக தகவல்களை அறிய விரும்பினால் 011-45593000 என்ற எண்ணில் அல்லது natboard.edu.in தொடர்பு கொள்ளலாம்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்