கோயம்பேடு சந்தை சில்லறை விற்பனை கடைகள் திறப்பு – முதன்மை அதிகாரி அறிவிப்பு!!
தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 10) முதல் புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகள் நடைமுறைக்கு வரவுள்ளது. இதன் காரணமாக கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனைக்கு தடை என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை சில்லறை விற்பனையாளர்கள் கடைகளை திறக்கலாம் என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு சந்தை:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா நோய் பரவல் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இதனை குறைப்பதற்காக தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறையினர் தொடர்ந்து ஆலோசித்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அறிவித்து வருகின்றனர். அதன்படி தற்போது தமிழகத்தில் பரவி வரும் கொரோனாவின் இரண்டாவது அலையை தடுப்பதற்கு புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகளை அறிவித்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் நாளை (ஏப்ரல் 10) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. அதில் கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனைக்கு தடை என்று அறிவித்தனர். இதனால் பலர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த நடவடிக்கையை எதிர்த்து கோயம்பேடு சில்லறை விற்பனையாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சில்லறை வியாபாரிகளுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் விதிப்பதை ஏற்க முடியாது என்று தெரிவித்தனர்.
ஆன்லைன் வழிக்கல்வி மாணவர் சேர்க்கை – அழகப்பா பல்கலைக்கு சான்று!!
இதுகுறித்து சில்லறை வியாபாரிகளிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பின்பு வணிக வளாக முதன்மை அலுவலர் கோவிந்தராஜ் கூறுகையில் நாளை (ஏப்ரல் 10) முதல் திங்கள் கிழமை வரை சில்லறை வியாபாரிகள் கடைகளை திறக்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் வருகிற திங்கள் கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.