தமிழக அரசின் “தமிழ்ச் செம்மல்” விருது – மதுரை காமராசர் பல்கலை பேராசிரியர் தேர்வு!!
மதுரை காமராசர் பல்கலை தமிழ்த்துறை பேராசிரியர் சத்தியமூர்த்தி தமிழக அரசின் “தமிழ்ச்செம்மல்” விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
“தமிழ்ச்செம்மல்” விருது:
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மற்றும் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் அறிஞர்கள் மற்றும் தமிழ் அமைப்பை ஏற்படுத்தி தமிழ் பண்பாடு, கலாசாரத்தை பாதுகாப்போருக்கு தமிழக அரசின் சார்பில் “தமிழ்ச்செம்மல்” விருது வழங்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறப்பு -பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு!!!
தமிழ் பேராசிரியர் சத்தியமூர்த்தி:
2020ம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருதிற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் சத்தியமூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 75க்கும் மேற்பட்ட சர்வதேச, தேசிய கருத்தரங்கங்களில் தமிழ்மொழி சார்ந்த ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்து உள்ளார். மேலும், 45க்கும் மேற்பட்ட தமிழ் இலக்கிய நூல்களை பதிப்பகம் செய்துள்ளார். 10 தமிழ் ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார்.
TNPSC குரூப் 1 வினா, விடைத்தாள் குளறுபடி – நிபுணர் குழு அமைப்பு!!
தமிழ்ப்பணி:
மேலும் இவர், காமராசர் பல்கலைக்கழக தமிழ்த்துறைக்கு பல்வேறு நாடுகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் வருகை புரிந்தது மற்றும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக பல்வேறு நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டது போன்ற பணிக்காக சத்தியமூர்த்தி “தமிழ்ச்செம்மல்”விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்