TN TRB 9000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!
தமிழக அரசு பள்ளிகளில் 15 ஆயிரம் ஆசிரியர் காலி பணியிடங்கள் இருப்பதாகவும், அந்த பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக இந்த ஆண்டு மட்டுமே 9,000 பேர் பணியமர்த்தப்பட உள்ளதாகவும் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
9000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்
தற்போது நடத்தப்பட்ட சட்டப்பேரவை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசினார். அப்போது பள்ளி குறித்தான 34 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதாவது 2022 – 23 ஆம் கல்வியாண்டில் 7500 திறன் வகுப்புகள் 550 கோடி செலவில் உருவாக்கப்பட உள்ளதாக அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
இது மட்டுமல்லாமல் ஏழு கோடி ரூபாய் செலவில் உலகத் தரம் வாய்ந்த பள்ளிகள் சென்னையில் அமைக்கப்படும் எனவும், 30 கோடி ரூபாய் செலவில் ஆங்கில மொழி ஆய்வகங்கள் அரசுப்பள்ளிகளில் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வியை மேம்படுத்தும் வகையில் இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு சிறப்பாக பணியாற்றி வரும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 100 பேருக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
திருப்பதி தரிசனம் செல்லும் தமிழக பக்தர்களுக்கு ஷாக் அறிவிப்பு – பாதுகாப்பு ஊழியர்கள் செய்த காரியம்!
இது மட்டுமல்லாமல் மாணவர்களின் உடல் நலம் காக்க சிறப்பு பயிற்சிகளும், மனநலம் காக்க விழிப்புணர்வு முகமும் ஒவ்வொரு வாரமும் அந்த பள்ளிகளிலேயே நடத்தப்படும் எனவும் கூறியுள்ளார். தற்போது அரசு பள்ளிகளில் 15 ஆயிரம் ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக தற்போது முதற்கட்டமாக இந்த ஆண்டு மட்டுமே 9 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்கப்பட உள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.