சந்திரகலாவிடம் சவால் விடும் சரஸ்வதி – “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில், கோதை சரஸ்வதியை சமையலறைக்குள் அனுமதிக்காததை சொல்லி சந்திரகலா சரஸ்வதியை அவமானப்படுத்துகிறார். இன்னும் 4 நாட்களுக்குள் நான் சமைக்க போகாமல் இருந்தால் அந்த வீட்டை விட்டு வெளியே சென்றுவிடுவேன் என சரஸ்வதி சவால் விடுகிறார்.
தமிழும் சரஸ்வதியும்:
தமிழும் சரஸ்வதியும் சீரியலில் சரஸ்வதி 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதை நினைத்து குடும்பத்தில் அனைவரும் சந்தோசமாக இருந்தாலும் கோதை இன்னும் முழு மனதுடன் சரஸ்வதியை ஏற்று கொள்ளவில்லை. திருமணம் முடிந்து சரஸ்வதி வீட்டில் அனுமதித்தாலும் சமையல் அறைக்குள் போக கூடாது என கோதை உத்தரவிட்டிருக்கிறார். அதனால் சரஸ்வதி வருத்தமாக இருக்கிறார். தெரிந்தவர்கள் வந்து சரஸ்வதியை காபி போட்டு கொடுக்க சொல்ல ஆனால் கோதையை விட்டு கொடுக்காமல் சரஸ்வதி நடந்து கொள்கிறார்.
TN Job “FB Group” Join Now
அதனால் கோதைக்கு சரஸ்வதி மீது நல்ல மரியாதை வருகிறது. இந்நிலையில் சரஸ்வதியை சந்திரகலா கோவிலில் பார்த்து பேசுகிறார். அப்போது நீ என்ன செய்தாலும் உன்னால் கோதை மனதில் இடம் பிடிக்க முடியாது என சொல்ல, அந்த வீட்டில் வேலை செய்யும் வேலைக்கார பெண்ணிற்கு கூட சமையலறைக்கு செல்ல அனுமதி இருக்கிறது. ஆனால் உனக்கு உரிமை இல்லை என நக்கலாக பேசுகிறார். அப்போது சரஸ்வதிக்கு கோவம் வருகிறது.
TN TRB 9000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!
இன்னும் 4 நாட்களில் அத்தையே என்னை கூப்பிட்டு கிட்சன் போகலாம் என சொல்லும் அளவிற்கு நான் நடந்து கொள்வேன் என சொல்ல, 4 நாட்களில் நீ சொன்ன மாதிரி சமையலறைக்கு போகாமல் இருந்தால் உன்னால் சமைக்க முடியாமல் இருந்தால் இந்த வீட்டை விட்டு வெளியே போயிருவியா என கேட்க, இந்த சாமி முன்னாடி வைத்து சொல்கிறேன். 4 நாட்களில் அந்த வீட்டில் நான் சமைப்பேன் இல்லை என்றால் அந்த வீட்டை விட்டு வெளியே சென்றுவிடுவேன் என சாவல் விடுகிறார்.