வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு.. புதிய வாரியம் அமைக்கும் முதல் மாநிலம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!!
வக்பு சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதை ஏழை எளிய முஸ்லிம்களின் உரிமைபறிக்கப்படும் செயல் என்று தெரிவித்து திமுக, காங்கிரஸ் உட்பட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பிறகு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பெரும்பான்மையின் அடிப்படையில் கடும் எதிர்ப்புகளை மீறி வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் புதிதாக நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கேரளா, தற்போது இந்த சட்டத்தின் அடிப்படையில் புதிய வாரியம் அமைக்கும் முதல் மாநிலமாகியுள்ளது.
IDBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2025 – 100+ காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!
அதாவது, “கேரள வக்ஃப் வாரியத்தின் பதவிக்காலம் புதிய சட்டம் அமலுக்கு வரும் முன்னரே (டிசம்பர் 19,2024) முடிவடைந்ததால், தற்போது நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் புதிய வாரியத்தை தேர்வு செய்ய வேண்டிய சூழல் நிவவியுள்ளது. மேலும், புதிய வாரியத்தைத் தேர்ந்தெடுக்கும் பணியை அரசு ஏற்கனவே தொடங்கிய நிலையில், சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ் மீண்டும் தேர்வு நடைமுறைகளைத் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது”.
























