ஞாயிறு, இரவு நேர முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – மாநில முதல்வர்!
கேரள மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு மத்தியில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தொடரும் என்று முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தெரிவித்து உள்ளார்.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்:
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில் சில மாநிலங்களில் மட்டும் தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. அதில் முதலிடத்தில் உள்ளது கேரள மாநிலம். முதல் அலையை சிறப்பாக கையாண்ட அம்மாநில அரசு, 2வது அலையில் கோட்டை விட்டது. பண்டிகை நாட்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கியதே கொரோனா பரவியதற்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதனால் தீவிர கட்டுப்பாடுகளை விதிக்குமாறு மத்திய குழுவினர் அறிவுறுத்தி உள்ளனர். எனவே அம்மாநிலத்தில் 2 வாரங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஞாயிறு முழு ஊரடங்கு மீண்டும் அமலாகி உள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!!
இந்நிலையில் மாநிலத்தின் கொரோனா வைரஸ் நிலைமையை ஆய்வு செய்யும் கூட்டத்திற்குப் பிறகு முதல்வர் பினராயி விஜயன் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் தினசரி இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர முடிவு செய்யப்பட்டு உள்ளது. கேரளாவில் சனிக்கிழமை 29,682 புதிய கொரோனா பாதிப்புகள், 25,910 டிஸ்சார்ஜ் மற்றும் 142 இறப்புகள் பதிவாகியுள்ளதாக முதல்வர் தெரிவித்தார். கேரளாவில் செயலில் உள்ள கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2,50,065 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 21,422 ஆகவும் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் செப்.9 வரை மழை பெய்யவுள்ள மாவட்டங்கள் – வானிலை அறிக்கை!
கடந்த இரண்டு வாரங்களுடன் ஒப்பிடும்போது கடந்த ஒரு வாரத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் சதவீதம் குறைந்துள்ளது. கோவிட் -19 தடுப்பூசியின் முதல் டோஸ் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 75 சதவீதம் பேருக்கு போடப்பட்டதாக முதலவர் கூறினார். இதுவரை மொத்தம் 2,15,72,491 பேர் முதல் டோஸையும், 79,90,200 பேர் இரண்டாவது டோஸையும் பெற்றுள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது.