தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!!

0
தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!!
தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!!
தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் பல மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் பள்ளிகளை திறக்க வேண்டும் என பெற்றோர்களும் கல்வியாளர்களும் கோரிக்கை வைத்தனர். அதனை பரிசீலனை செய்த அரசு செப்டம்பர் 1 ஆம் தேதி 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கியது. மேலும் வகுப்பறைகளில் கொரோனா பரவல் ஏற்படாமல் இருக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள இளம் நடிகர் – ரசிகர்கள் ஆர்வம்!

அதன் படி பள்ளிகள் திறக்கப்பட்டு செலயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு பின்னர் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து செப்டம்பர் 8 ஆம் தேதிக்கு பின்னர் முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் – ‘இந்த’ அறிகுறிகள் இருந்தால்!

மேலும் பள்ளிகள் திறப்பது குறித்து 8-ஆம் தேதிக்கு பின்னர் முதல்வர் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் எனவும், அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வந்தால் ம் மாணவர்களின் பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும், உயர் வகுப்புகள் செயல்படுவதை கவனித்து அதன் அடிப்படையில், மழலையர் வகுப்புகள் மற்றும் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளை 15ஆம் தேதிக்கு பிறகு திறப்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் என்று ஊரடங்கு அறிவிப்பின் போது தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!