தமிழகத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் – ‘இந்த’ அறிகுறிகள் இருந்தால்!

0
தமிழகத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் - 'இந்த' அறிகுறிகள் இருந்தால்!
தமிழகத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் - 'இந்த' அறிகுறிகள் இருந்தால்!
தமிழகத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் – ‘இந்த’ அறிகுறிகள் இருந்தால்!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் கொரோனா அறிகுறிகள் உள்ள மாணவர்கள் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் மாணவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் மருத்துவ வல்லுநர்கள் ஆலோசனை படி அரசு பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுத்தது. அதன் படி, கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கே உன்னை அர்ப்பணி’ – செப்.5 இன்று ஆசிரியர் தினம்!

பள்ளிகளில் அரசு அறிவித்த கொரோனா கட்டுப்பாடு வழிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் வகுப்பறையில் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், சமூக இடைவெளி கடைபிடிக்கும் வகையில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் பள்ளிகளுக்கு வருவதில் ஒரு சில மாணவர்களுக்கு தயக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது. பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், பள்ளிகளுக்கு மாணவர்களை அனுப்புவதில், பெற்றோர்களிடமும் தயக்கம் இருப்பதாகத் தெரிகிறது.இந்நிலையில் பள்ளிகள் திறந்து முதல் நாள் முதல் ஒரு சில ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், 10ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

சென்னை மெரினாவில் படகு சேவை அமைக்க திட்டம் – சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல்!

இந்நிலையில், தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் புதிய அறிவுரைகளை வழங்கியுள்ளனர். அதன்படி, காய்ச்சல், வாந்தி, பேதி, இருமல், உடல் வலி, சோர்வு உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் தெரிந்தால் மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவ்வாறு அறிகுறிகள் இருந்தால் மருத்துவ மையங்களில் பரிசோதனை செய்து கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்பின், தொற்று இல்லை என்று தெரிந்து உடல் நலம் தேறிய பின், பள்ளிக்கு வந்தால் போதும் என்று கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்தமாட்டார்கள் எனவும் ஆனால் ஆசிரியர்கள் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!