வானிலை அறிக்கை:
தமிழகத்தில் நடப்பு ஆண்டில் மிகவும் அதிகபட்சமாக வெப்பநிலை பதிவாகி வருகிறது. நாட்டிலேயே தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் 108 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தமிழக பகுதிகளில் மேல் வளிமண்டல கீழ் அடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.
அதிகரிக்கும் வெப்பம்.. 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
இதன் காரணமாக இன்று மற்றும் நாளை தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று மற்றும் நாளை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 26ம் தேதி முதல் 30-ம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.