187 பள்ளி மாணவர்கள், 75 ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி – சுகாதாரக்குழு எச்சரிக்கை!!

0
187 பள்ளி மாணவர்கள், 75 ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி - சுகாதாரக்குழு எச்சரிக்கை!!
187 பள்ளி மாணவர்கள், 75 ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி - சுகாதாரக்குழு எச்சரிக்கை!!
187 பள்ளி மாணவர்கள், 75 ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி – சுகாதாரக்குழு எச்சரிக்கை!!

கேரளாவில் பள்ளிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் திறக்கப்பட்ட நிலையில் மலப்புரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பயிலும் 187 மாணவர்களுக்கும், 75 ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பள்ளிகளில் கொரோனா தொற்று:

கேரளா மாநிலத்தில் உள்ள மலப்புரம் மாவட்டம் மரஞ்சேரி அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் பெரும்படப்புவில் உள்ள வன்னேரி உயர்நிலைப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் கேரளாவில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் 487 பள்ளிகள் திறப்பு – 97,959 மாணவர்களை கண்காணிக்கும் பணி தீவிரம்!!

அந்த பள்ளிகளில் பயிலும் ஒரு மாணவர்க்கு கொரோனா அறிகுறி தென்பட்டதை தொடர்ந்து அந்த பள்ளிகளில் பிப்ரவரி 5 ஆம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மரஞ்சேரி பள்ளியை சேர்ந்த 148 மாணவர்கள், 39 ஆசிரியர்கள் மற்றும் வன்னேரி பள்ளியை சேர்ந்த 39 மாணவர்கள், 36 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர் பட்டியல் – பிப்ரவரி 11 கடைசி நாள்!!

இதனால் மருத்துவ குழு சார்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளனர். தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறக்கபட்ட நிலையில் தற்போது கேரள பள்ளிகளில் கொரோனா பரவுவது குறித்த செய்தி பெற்றோர்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!