ஜூன் 16 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – கடைகள் இரவு 7 மணிவரை திறக்க அனுமதி!
கொரோனா பரவல் நிலவரத்தை கருத்தில் கொண்டு கேரள மாநிலத்தில் முழு ஊரடங்கு உத்தரவு ஆனது வருகிற ஜூன் 16ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் கடைகள் செயல்படும் நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்:
கேரள மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 14,672 புதிய COVID-19 நோய்த்தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் 21,429 பேர் பாதிப்பு இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் 227 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாநிலத்தில் தற்போது 1,60,653 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 24,62,071 ஐ எட்டியுள்ளன, மொத்த இறப்பு எண்ணிக்கை 9,946 ஆக உள்ளது.
இன்று முதல் மதுபான கடைகள் திறப்பு – புதுச்சேரி அரசு அறிவிப்பு!!
இந்நிலையில் அம்மாநிலத்தில் முழு ஊரடங்கானது ஜூன் 16 வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த காலத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்படும், மேலும் ஜூன் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் எவ்வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. நகைகள், காலணி போன்ற பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் ஜூன் 17 வரை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். இந்த காலகட்டத்தில் மாற்று நாட்களில் மாநிலத்தில் வங்கிகள் திறக்க அனுமதிக்கப்படும்.
TN Job “FB Group” Join Now
ஜூன் 17 முதல், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை பிரிவுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். அத்தியாவசியப் பொருட்கள், தொழில்களுக்கான மூலப்பொருட்கள் (பேக்கேஜிங் உட்பட), கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இப்போது செயல்படுவதை போல் தொடர்ந்து செயல்படும் என்று முதலமைச்சர் அலுவலக ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மே 30 முதல் ஊரடங்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.