இன்று முதல் மதுபான கடைகள் திறப்பு – புதுச்சேரி அரசு அறிவிப்பு!!
புதுச்சேரியில் இன்று (ஜூன் 8) முதல் மதுபான கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு வருகிற ஜூன் 14ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக துணைநிலை ஆளுநர் அவர்கள் அறிவித்து உள்ளார்.
ஊரடங்கு தளர்வுகள்:
நாடு முழுவதும் கொரோனா 2வது அலையின் தாக்கம் வெகுவாக குறைய தொடங்கி உள்ளது. தினசரி 4 லட்சத்தை நெருங்கிய பாதிப்பு எண்ணிக்கை, தற்போது 1.5 லட்சத்திற்கும் கீழ் சென்றுள்ளது. தமிழகத்திலும் கடந்த 24 மணிநேரத்தில் 20 ஆயிரத்திற்கும் குறைவானவர்களுக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று முதல் ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன. புதுச்சேரியிலும் பாதிப்பு எண்ணிக்கை தற்போது குறையத் தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மாலை 5 மணிவரை இயங்கும் – அரசு அறிவிப்பு!!
அங்கு ஒரே நாள் பாதிப்பு எண்ணிக்கை 500க்கும் கீழ் சென்றுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 10 உயிரிழப்புகள் மட்டுமே பதிவாகி உள்ளது. இதனையடுத்து அங்கு அமலில் உள்ள ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மேலும் ஊரடங்கு ஜூன் 14 வரை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (ஜூன் 8) முதல் அனைத்து கடைகளும் மாலை 5 மணிவரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் நீண்ட நாட்களாக பூட்டப்பட்டு இருந்த அனைத்து விதமான மதுபான கடைகளும் இன்று முதல் காலை 9 மணி தொடங்கி மாலை 5 மணி வரை திறந்திருக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் பார்கள் இயங்க தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி கடற்கரை சாலைகளில் பொதுமக்கள் காலை 5 மணிமுதல் காலை 9 மணிவரை நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம் எனவும் தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது. இவை அனைத்தும் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.