தமிழக முன்களப் பணியாளர்களுக்கு ரூ.160 கோடி ஊக்கத்தொகை – அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் கொரோனா பேரிடர் காலத்தில் அயராது உழைத்து வரும் முன்களப் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ.160 கோடி ஊக்கத்தொகை வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
முன்களப் பணியாளர்கள்:
தமிழகத்தில் கடந்த மூன்று மாத காலமாகவே கொரோனா என்னும் உயிர்கொல்லி நோய் இரண்டாம் அலையாக உருவெடுத்து மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்து வருகிறது. மேலும் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் மருத்துவர்கள், செவியியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் போன்றவர்கள் அயராது உழைத்து வருகின்றனர். மேலும் பல முன்கள பணியாளர்கள் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி தங்களது உயிரை இழந்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதற்காக தற்போது ரூ.160 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியதாவது, ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மூன்று மாத காலமாக தொடர்ந்து போராடி வரும் முன்கள பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
ஜூன் 16 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – கடைகள் இரவு 7 மணிவரை திறக்க அனுமதி!
அதன்படி காலமுறை ஊதியத்துடன் கூடிய அரசு பணியாளர்கள், ஒப்பந்த முறையில் பணியாற்றும் பணியாளர்கள், அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தகுதி வாய்ந்த பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.160 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் ஊக்கத்தொகை வழங்கும் பணிக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநரை ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளதாகவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.