ஜனவரி 4 முதல் கல்லூரிகள் திறப்பு- மாநில அரசு அறிவிப்பு!!

0
ஜனவரி 4 முதல் கல்லூரிகள் திறப்பு- மாநில அரசு அறிவிப்பு
ஜனவரி 4 முதல் கல்லூரிகள் திறப்பு- மாநில அரசு அறிவிப்பு
ஜனவரி 4 முதல் கல்லூரிகள் திறப்பு- மாநில அரசு அறிவிப்பு!!

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் கேரளாவில் ஜனவரி மாதம் 4-ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கபோவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்லூரிகள் திறப்பு:

கேரளாவில் கல்லூரிகள் மூடப்பட்டு 9 மாதங்கள் முடிவடைந்த நிலையில் கல்லூரிகள் திறப்பது குறித்து கல்வித்துறை சார்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் கல்லூரிகள் திறக்கலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிசம்பர் 28-ஆம் தேதி முதல் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி பணியாளர்கள் கல்லூரிகளுக்கு வரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஜே.இ.இ மெயின் நுழைவு தேர்வு புதிய விதிமுறைகள்- தேசிய தேர்வு முகமை வெளியீடு!!!

கல்லூரிகள் திறக்கப்பட்டபின் 2 பகுதிகளாக செயல்படும் எனவும் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை கல்லூரிகள் செயல்பட வேண்டும் எனவும் செமஸ்டர் அடிப்படையில் 50 சதவீத மாணவர்களுக்கு சுழற்சி அடிப்படையில் வகுப்புகள் நடத்தலாம் எனவும் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் ஐந்தாவது மற்றும் ஆறாவது செமஸ்டர் மாணவர்கள் மற்றும் முதுகலையில் அனைத்து பிரிவு மாணவர்களும் வகுப்புகளில் அனுமதிக்கலாம் எனவும் கேரள அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் கொரோனா பாதிப்பை பொறுத்தே அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கப்படும். கொரோனா பரவல் மாநிலங்களில் கேரளா அரசு 6-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.நாள்தோறும் கொரோனா பாதிப்பு தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது. எனவே கல்வி நிறுவனங்கள் திறப்பிற்கு சுகாதாரத்துறை அனுமதி பெற வேண்டியது அவசியமாகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!