இன்று முதல் கல்லூரிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
கேரளாவில் கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் இன்று முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டுள்ளன. கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறலாம் என கேரள அரசு தெரிவித்துள்ளது.
கல்லூரிகள் திறப்பு:
கொரோனா நோய் அச்சம் காரணமாக கல்வி நிலையங்கள் கடந்த மார்ச் முதல் மூடப்பட்டு ஜூன் 1 முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. அவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 17 முதல் 31 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
50 வயதிற்கு மேல் உள்ள ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகள் கிடையாது – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
இந்நிலையில் கல்லூரிகள் ஜனவரி 4 முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் அறிவியல் மற்றும் கலை கல்லூரிகள், சட்டக்கல்லூரிகள், இசை கல்லூரிகள், நுண்கலை கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டுள்ளன. கல்லூரிகளில் இறுதியாண்டு இளங்கலை மற்றும் முதுகலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு, ஆராய்ச்சி மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டன.
9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறப்பு!!
இதேபோல பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் 3-ஆம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு வாரத்தில் 6 நாட்களும் வகுப்புகள் நடைபெறும். கல்லூரியில் ஒரு மாணவருக்கு 5 மணி நேரம் கணக்கில் காலை 8.30 முதல் மாலை 5 மணி வரை 2 ஷிப்ட்களாக வகுப்புகள் நடத்தலாம். சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்த ஆசிரியர்கள் சார்பாக போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் ஏற்கனவே கடந்த மாதம் 28 ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் வகுப்பறைக்கு வந்து தூய்மை பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்