மேலும் 2 வாரங்கள் முழு ஊரடங்கு – ஐஐஎஸ்சி நிபுணர் ஆலோசனை!!
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகமாக பரவி வருவதால் மேலும் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு நீடிப்பது குறித்தும் மேலும் கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் குறித்தும் ஐ.ஐ.எஸ்.சி நிபுணர் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பு:
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்திற்கு மேலாக பதிவாகியுள்ளது. இதனால் பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதிநாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதனால் எந்த மாற்றமும் ஏற்படாத காரணத்தினால் 14 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மளிகை, பால், காய்கறி கடைகள் மருந்தகங்கள் மட்டுமே வழக்கம் போல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐ.ஐ.எஸ்.சி நிபுணர் ஒருவர் இது குறித்து கூறுகையில், கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பரவல் அரை லட்சத்தை கடந்து பதிவாகியுள்ளது. இதே நிலைமை நீடித்தால் மே மாத நடுவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு? பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!!
இந்நிலையில் மேலும் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். அதனால் மட்டுமே கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் மே மாத இறுதிக்குள் 3 லட்சத்துக்கு அதிகமாக கொரோனா பரவல் பெங்களூரு மாநகராட்சியில் மட்டுமே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.