1 முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு – கல்வி வாரிய கூட்டமைப்பு வேண்டுகோள்!!

1
1 முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு - கல்வி வாரிய கூட்டமைப்பு வேண்டுகோள்!!
1 முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு - கல்வி வாரிய கூட்டமைப்பு வேண்டுகோள்!!
1 முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு – கல்வி வாரிய கூட்டமைப்பு வேண்டுகோள்!!

1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்க வேண்டும் என கல்வி வாரியங்களின் கூட்டமைப்பின் சார்பாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா அவர்களுக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

பள்ளிகள் திறப்பு:

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றி படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. பள்ளிகள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநில கல்வி வாரிய கூட்டமைப்புகள் சார்பில் முதல்வர் எடியூரப்பா அவர்களுக்கு வேண்டுகோள் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டு உள்ளது.

எல்.எல்.எம்., படிப்பு 2022-2023ம் ஆண்டு முதல் ரத்து – இந்திய பார் கவுன்சில்!!

அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் அனைத்து மாநில மற்றும் மத்திய ஆட்சிப் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் உள்ள அங்கன்வாடிகளை மீண்டும் துவக்குமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கு தளர்வுகளின் படி, மாநிலத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. வித்யகாமா திட்டத்தின் படி, 6 முதல் 8ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு வீட்டில் இருந்த படியே பாடங்கள் கற்பிக்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

இதனால் மாணவர்களின் நலன் கருதி 1 முதல் 5ம் வகுப்பு வரையிலானவர்களுக்கு பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!