கர்நாடகா மாநில அரசு புதிய கல்வியாண்டிற்கான பள்ளி பாடப்புத்தகங்களை திருத்த இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பாடப்புத்தகம் திருத்தம்
கர்நாடகா மாநில அரசு சார்பில் வர இருக்கும் புதிய கல்வியாண்டான 2024-25ல் கன்னடம் I, கன்னடம் III மற்றும் சமூக அறிவியல் பள்ளி பாடப்புத்தகங்களை திருத்த இருப்பதாக அறிவித்துள்ளது. அதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் பாடப்புத்தகங்களில் இலக்கியப் படைப்புகள், பல்வேறு தலைப்புகளில் புதிய உள்ளடக்கம் ஆகியவை வர இருக்கிறது. இது குறித்து தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசு வாக்குறுதி அளித்தது.
Repco வங்கியில் Manager வேலைவாய்ப்பு 2024 – மாத ஊதியம்: ரூ.78,230/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
அதன் பின் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கடந்த அரசின் ஆட்சியின் போது உள்ள பாட புத்தகங்கள் மத சார்புடையதாக இருக்கிறது. அதனால் சமத்துவத்தின் அடிப்படையில் ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டியது அவசியம் என்பதால் முதல்வர் இந்த முடிவை எடுத்து இருக்கிறார். தற்போது 2024-25 கல்வியாண்டிற்கான 114 திருத்தப்பட்ட பாடப்புத்தகங்களுக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.