6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து – மாநில அரசு அறிவிப்பு!!

0
6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து - மாநில அரசு அறிவிப்பு!!
6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து - மாநில அரசு அறிவிப்பு!!
6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து – மாநில அரசு அறிவிப்பு!!

கர்நாடகா மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை:

கர்நாடகா மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,234 ஆக பதிவாகியுள்ளது. பெங்களூரு மாநகராட்சியில் மட்டும் நேற்று 2,906 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை தடுக்க மாநில அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

TN Job “FB  Group” Join Now

முதற்கட்டமாக கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக பெங்களூரு மாநகராட்சியில் உள்ள பள்ளிகளுக்கான அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் கடன் உத்தரவாத திட்டம் – கால அவகாசம் நீட்டிப்பு!!

ஆனால் அந்த மாணவர்களுக்கு வருகைப்பதிவு கட்டாயமில்லை, பெற்றோர்கள் அனுமதி வழங்கினால் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வித்யகாமா முறைப்படி நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அந்த மாணவர்களுக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் – தேடல் குழு தலைவர் நியமனம்!!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள மற்ற மாவட்டங்களில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எஸ்.சுரேஷ் குமார் கூறுகையில், “கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த முதல்வர் எடியூரப்பா உடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

தமிழக சட்டமன்ற தேர்தல் எதிரொலி – ஒரே நாளில் 3,065 பேருந்துகள் இயக்கம்!!

மேலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வருகைப் பதிவேடு கட்டாயமில்லை எனவும், நடப்பு கல்வியாண்டில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கிரேடு மதிப்பீடு செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில தனியார் பள்ளிகள் தேர்வுகள் அனைத்தையும் நடத்தி முடித்து விடுமுறை அளித்துள்ளது”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!