அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் – தேடல் குழு தலைவர் நியமனம்!!
அண்ணா பல்கலைக்கழகத்திலுள்ள துணை வேந்தரின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் மாதம் 11ம் தேதியுடன் முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில் புதிய துணைவேந்தரை தேடும் குழு தலைவர் தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகம்:
இந்தியாவில் தலைசிறந்த பல்கலைக்கழகத்தில் ஒன்று அண்ணா பல்கலைக்கழகம். நாட்டின் நிறுவன தரவரிசை கட்டமைப்பில் இது பத்தாவது இடத்தில் அமர்ந்திருக்கிறது. மேலும் பல்கலைக்கழகங்களுள் நான்காவது இடத்திலும், பொறியியலில் எட்டாவது இடத்திலும் அண்ணா பல்கலைக்கழகம் இடம்பெற்றுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பா திகழ்கிறார். ஆனால் இவர் மீது பல வழக்குகள் தற்போது சுமத்தப்பட்டுள்ளது.
இவர் மீது சுமார் ரூ.280 கோடி ஊழல் புகார் எழுந்துள்ள நிலையில், தற்போது இதனை விசாரிப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் தமிழக அரசு ஓர் குழுவை அமைத்துள்ளது. இதன் விசாரணையின் அடிப்படியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர்கள், ஊழியர்கள் என பலர் சிக்கி வருகின்றனர். இந்நிலையில் தற்போதைய துணைவேந்தரின் ஆயுட்காலம் வருகிற ஏப்ரல் மாதம் 11ம் தேதியுடன் முடிவுக்கு வரவுள்ளது.
தமிழக அரசு சார்பில் 3 நாள் கோடைகால சுற்றுலா – சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவிப்பு!!
தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய துணை வேந்தரை தேடும் குழு தலைவர் தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரை தமிழக ஆளுநர் நியமித்தார். அதன்படி புதிய துணைவேந்தரை தேடும் குழு தலைவராக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையில் தற்போது ஓர் குழு அமைக்கப்பட்டு புதிய துணைவேந்தரை தேடும் பணி வருகிற ஏப்ரல் 6ம் தேதிக்கு பின்பு துவங்கவுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்