தமிழக சட்டமன்ற தேர்தல் எதிரொலி – ஒரே நாளில் 3,065 பேருந்துகள் இயக்கம்!!
தமிழகத்தில் அடுத்த வாரம் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்காக பயணிகளுக்கு பயனளிக்கும் வகையில் அதிக அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இது குறித்த விபரங்களை போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல்:
தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களது பிரச்சார வேலைகளை மிக முனைப்புடன் செய்து வருகின்றனர். இந்நிலையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக மக்களுக்கு பயனளிக்கும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் வழக்கமான ரயில் சேவைகள் தொடக்கம்? ரயில்வே அதிகாரி விளக்கம்!!
வெளியூரில் பணிபுரியும் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிப்பதற்காக இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இது குறித்து போக்குவரத்துத்துறை ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியாதவது, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தற்போது சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று (ஏப்ரல் 1) முழுவதும் அதாவது 24 மணி நேரப்படி தமிழகத்தில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 2,535 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று (ஏப்ரல் 2) காலை 9 மணி நிலவரப்படி 510 பேருந்துகள் மற்றும் 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நேற்று (ஏப்ரல் 1) முதல் இன்று (ஏப்ரல் 2) காலை 9 மணி நிலவரம் வரை தமிழகத்தில் மொத்தம் 3,065 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.
Gold Rate in Chennai – இன்றைய தங்க விலை நிலவரம்!!
அதில் மொத்தம் 1,22,600 பேர் இதுவரை பயணித்துள்ளனர். மேலும் இதுவரை 30,237 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த சிறப்பு பேருந்துகள் கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் ரயில் நிலைய நிறுத்தம், பூந்தமல்லி மற்றும் தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் ஆகிய 6 இடங்களில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்