இன்று முதல் மே 4 வரை அனைத்து பள்ளிகளும் மூடல் – மாநில அரசு அறிவிப்பு!!
கொரோனா தொற்று:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்பட்டது. நடப்பு ஆண்டில் பள்ளிகள் முறையாக செயல்படாத காரணத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதில் அரசுகள் கவனமுடன் செயல்பட்டது.
தமிழகத்தில் பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு – காவல்துறை ஆணையர் வெளியீடு!!
இரண்டாம் அலை:
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை கடந்த மார்ச் மாதம் முதல் பரவி வருகிறது. இதனால் கடந்த ஜனவரி மாதம் முதல் செயல்பட்டு வந்த பள்ளிகள் அனைத்தும் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வந்த நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டது.
பள்ளிகள் மூடல்:
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஏப்ரல் 22ம் தேதியான இன்று முதல் மே 4ம் தேதி வரை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஏப்ரல் 30ம் தேதிக்குள் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான மதிப்பெண்கள் மதிப்பீடு செய்யப்பட உள்ளது. ஆசிரியர்கள் ஏப்ரல் 27ம் தேதி முதல் மே 4ம் தேதி வரை பள்ளிக்கு வருகை புரிவார்கள். மாணவர்கள் தங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்