தமிழகத்தில் பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு – காவல்துறை ஆணையர் வெளியீடு!!
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அவர்கள் நகரம் முழுவதும் நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தி வரும் நிலையில், மாநகர பேருந்துகளில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு:
தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு போன்றவை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளையும் அரசு விதித்துள்ளது. இந்நிலையில் சென்னை மாநகர ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் அவர்கள் சென்னை மாநகரில் உள்ள பொது மக்களுக்கு தினமும் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறார். இன்று சென்னை அமைந்தகரை, அண்ணா ஆர்ச் அருகில், போக்குவரத்து காவல் சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் முழு ஊரடங்கை தவிர்க்க ஒரே வழி – பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!!
விழிப்புணர்வு முகாம்:
ஆணையர் விழிப்புணர்வை துவங்கி வைத்து பின்னர் அங்கு இருந்த மக்களிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசினார். அதில், அனைவரும் முகக்கவசம் அணியுங்கள், கைகளை சுத்தமாக கழுவுதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் போன்ற விஷயங்களை பின்பற்றினால் கொரோனாவை தடுக்க முடியும். ஹெல்மெட் போடாமல் செல்வது தனியாக ரிஸ்க் எடுப்பது போன்றது. ஆனால் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களால் அவருக்கும் மற்றவர்களுக்கும் பாதிப்பு. அதனால் தான் காவல்துறை அபராதம் விதித்து வருகின்றனர். நாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதற்கான உணவு சாப்பிடுங்கள்.
வழக்குப் பதிவு:
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் அவர்கள், கொரோனாவை தடுக்க சென்னை காவல் துறையின் அனைத்து பிரிவு போலீசாரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அனைவரும் சுய கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். இரவு நேர ஊரடங்கிற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். மேலும், சென்னை மாநகர பேரூந்துகளில் முகக்கவசம் அணியாமல் பயணம் செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்