தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு? மாவட்ட ஆட்சியர்களுடன் அவசர ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாவட்டத்திலும் உள்ள நிலவரம் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமை செயலாளர் அவசர ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா தொற்று:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தாக்கம் மார்ச் மாதம் முதல் பரவி வரும் நிலையில், கடந்த 10 நாட்களில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் தீவிர நோய் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 11,600 ஆகும்.
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸுகளின் இயக்கம் அதிகரிப்பு – அதிகாரிகள் தகவல்!!
ஊரடங்கு:
இந்நிலையில் தமிழகத்தில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்த காரணத்தால் நோய் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 20ம் தேதி இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறு தோறும் பொது முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசர ஆலோசனை:
இரவு நேர ஊரடங்கிற்கு பின்னரும் தொற்று பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை குறையவில்லை. பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த நிலையில் உள்ளது. இதனால் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிப்பது குறித்து மக்கள் எதிர்பார்க்கும் நிலையில், கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக இன்று மாலை 3:30 மணிக்கு தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் அவசர ஆலோசனை காணொலி மூலம் நடத்துகிறார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்