தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸுகளின் இயக்கம் அதிகரிப்பு – அதிகாரிகள் தகவல்!!
தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரும் நிலையில் அடுத்த 2 நாட்களில் 108 ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ஆம்புலஸ்ன்கள் அதிகரிப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த மாதம் முதல் இரண்டாம் அலையை தொடங்கியுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. தமிழக அரசு அவசர மருத்துவ தேவைகளுக்காக 108 இலவச ஆம்புலன்ஸ் சேவையை வழங்கியுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு அச்சம் – கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு!!
தமிழகம் முழுவதும் மொத்தம் 1,303 ஆம்புலன்ஸ்கள் செயல்பட்டு வருகின்றது. இதன் மூலம் தினமும் 5,200 பொது நோயாளிகள் பயனடைந்து வருகின்றனர். இதில், கொரோனா நோயாளிகளுக்காக 210 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றது. இதனால் 2,200 கொரோனா நோயாளிகள் பயனடைந்து வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றினால் நேற்று மாலை வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,25,059 ஆகும். இதுவரை 13,258 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 84,361 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 9,27,440 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்னும் நோய் பாதிப்புக்கு உள்ளாபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இரண்டு நாட்களில் ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்