மூர்த்தி ஆப்ரேஷனிற்கு மல்லியிடம் பணம் கேட்கும் கதிர் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலின் புதிய ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் ஆபத்தான நிலையில் மூர்த்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இந்நிலையில் கதிர் விஷயத்தை கேள்விப்பட்டு மூர்த்தி ஆப்ரேஷனிற்கு பல இடங்களில் பணம் கேட்கிறார். கடைசியாக முல்லை அக்கா மல்லியிடம் அவர் பணம் கேட்க இருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஒற்றுமையாக இருந்த குடும்பத்தில் பல பிரச்சனைகள் வந்துள்ளது. முல்லைக்கு டிரீட்மென்ட் பார்க்க கடன் வாங்கியதால் கதிரை மீனாவின் அப்பா அவமானப்படுத்துகிறார். அதனால் முல்லையின் அம்மா சண்டை போட பதிலுக்கு தனத்தின் அம்மாவும் சண்டை போடுகிறார். இந்நிலையில் கதிர் சுய மரியாதை தான் முக்கியம் என்பதால் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார். குடும்பத்தில் அனைவரும் தடுத்தும் கூட கதிர் சொல்வதை கேட்காமல் வெளியே செல்கிறார்.
Exams Daily Mobile App Download
அதனால் மூர்த்தி மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார். பின் கண்ணன் சென்று கூப்பிட்டும் கதிர் வராமல் இருப்பதால் மூர்த்தி கோவம் வருகிறது. பின் அனைவரையும் படுக்க சொல்ல தனம் பாய் விரித்து கொடுக்கிறார். மூர்த்தி படுத்ததும் அவருக்கு நெஞ்சு வலி வருகிறது. அதனால் பதறி போன ஜீவா கண்ணன் மூர்த்தியை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு செல்கின்றனர். அங்கே டாக்டர் பரிசோதனை செய்து மூர்த்திக்கு ஹார்ட்அட்டாக் வந்துள்ளதாக சொல்கிறார்.
உடனே ஆப்ரேசன் செய்ய வேண்டும் என சொல்ல ஒரு மணி நேரத்தில் பணம் ஏற்பாடு செய்ய வேண்டும் என ஜீவா பல இடங்களில் முயற்சி செய்கிறார். இந்த இரவு நேரத்தில் பணம் கிடைக்காமல் பல இடங்களில் இருக்கிறார். இனி வரும் எபிசோடுகளில் கதிரிடம் மூர்த்தி நிலைமை பற்றி கண்ணன் தகவல் சொல்கிறார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கதிர் பணத்தை ஏற்பாடு செய்ய முல்லையின் அக்கா மல்லியிடம் பணம் கேட்கிறார். ஏற்கனவே முல்லை மல்லிக்கு கதிரை வைத்து சண்டை என்பதால் மல்லி கதிரை அவமானப்படுத்துகிறார்.