முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 7
விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்
ஜூன் நடப்பு நிகழ்வுகள் வினா விடை – கிளிக் செய்யவும்
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்
- திரிபுரா மாநிலத்தில் அதிகம் விளையக்கூடிய ராணி ரக அன்னாசிப் பழத்தை மாநில அரசின் அதிகாரப்பூர்வ பழமாக குடியரசுத் தலைவர் ராம்நாத் அறிவித்தார்.
- தெலுங்கானா மாநில அரசாங்கத்தின் முக்கிய திட்டமான , காலேஷ்வரம் லிப்ட் நீர்ப்பாசன திட்டம் (KLIP), நீர்வள ஆதாரங்களுக்கான மத்திய அமைச்சகத்தின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவில் (TAC) பெரும் ஊக்கத்தை பெற்றுள்ளது..
- விழிஞம் விரிகுடா , இந்தியாவின் மிகச்சிறிய கடல் வெள்ளரி (இது வெறும் 2 செமீ அளவுக்கு வளரும்) உயிரினத்தின் இருப்பிடமாக உள்ளது எனவிஞ்ஞானிகள் தெரிவிக்கின்றன.
- மூன்றாம் தலைமுறை ஐரோப்பிய அழுத்த அணு உலை சீனாவின் டைஷன் எனும் இடத்தில் அதன் முதல் கட்ட மின் உற்பத்தியை தொடங்கியுள்ளது.
- 20 பேர் கொண்ட அமெரிக்க விஞ்ஞானிகள் குழு அமெரிக்க தேசிய கடல்வள மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (NOAA) கப்பலில் இந்திய பெருங்கடலில் ஆய்வு மேற்கொள்வதில் இந்தியாவின் விஞ்ஞானிகளுடனான விரிவான ஒத்துழைப்பை குறிப்பதற்கு கோவாவிற்கு வந்துள்ளனர்.
- இந்திய ரிசர்வ் வங்கி (RBI) யின் பணவியல் கொள்கைக் குழுவானது, ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகளை உயர்த்தி 6.25 சதவீதமாக மாற்றியுள்ளது.
- நோர்வே இந்தியா கூட்டு முயற்சியில் (NIPI) 2018 ஆம் ஆண்டிலிருந்து 2020 வரை மூன்று வருட காலத்திற்குள் சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான நோர்வே அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
- சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே “புகையிலை-இல்லா இந்தியாவை” உருவாக்கவும், மக்கள் புகையிலை பழக்கத்தை விடுவதை ஊக்குவிக்கவும் வேண்டுகோள் விடுத்தார்.
- ரயில்வே வாரியம், குழந்தைகளின் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையத்துடன் (NCPCR) இணைந்து ஒரு கூட்டு முயற்சியாக, ரயில்வே பகுதிகளில் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்குகிறது.
- தொழில் முதலீடுகளில் பாலின வேறுபாடுகள் குறைத்து பெண்களுக்கு வழிகாட்டல் மற்றும் நெட்வொர்க்கிங் வாய்ப்புகளை வழங்குவது மற்றும் பெண்களுக்கு தொழில் மற்றும் சந்தை இணைப்புகளை துரிதப்படுத்துவதற்காக ஐ.நா வின் இந்தியா வணிக மன்றம் மற்றும் NITI Aayog இன் மகளிர் தொழில் முனைவோர் தளம் ஆகியவை ஒரு கூட்டுறவு அமைப்பை உருவாக்கியது
- பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையிலான பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் (டிஏசி), பாதுகாப்பு படையினருக்கு ரூ .5500 கோடி மதிப்புள்ள உபகரணங்களை கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்தியாவில் 2013 ஆம் ஆண்டிலிருந்து தாய்வழி இறப்பு விகிதம் 22 சதவிகிதம் குறைந்துள்ளது என்று மாதிரி பதிவு முறையின் (SRS) படி பதிவாகியுள்ளது
- ஆஸ்திரேலியாவின் பொருளாதார மற்றும் சமாதான நிறுவனம் (IEP) நிறுவனம் வெளியிட்ட 12 வது பதிப்பு. இந்தியாவின் ரேங்க் – 136; ஐஸ்லாந்து – 1
- ஹைதராபாத் ஒலி மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
- பேங்காக்கில் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி (IIFA) 2018 விருது விழா ,வாழ்நாள் சாதனையாளர் விருது: அனுபம் கெர்
- பாலி யுமிர்கார் விருது: விராத் கோலி;
- சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் (பெண்கள்): ஹர்மன் பிரீத் கவுர்
- பெண்களின் பாதுகாப்பு XPRIZE – இந்திய அமெரிக்க நன்கொடையாளர் அனு மற்றும் நவீன் ஜெயின்.
- தெலுங்கானா மாநில அரசால் காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த பதக்கம் முக்கியமந்திரி சர்வோன்னதா போ லிஸ் பதக்கம் 2018 – போலிஸ் கான்ஸ்டபிள் பி. ராமுலு
- இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மிதாலி ராஜ் சர்வதேச டி20 போட்டிகளில் 2000 ரன்களை கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.