JPSC, JSSC முறைகேடுகள்: ஜார்கண்ட் மாணவர்கள் 3-வது நாளாக காலவரையற்ற சத்தியாகிரக போராட்டம்!
Jharkhand Students Protest 2026: ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில், JPSC (Jharkhand Public Service Commission) மற்றும் JSSC (Jharkhand Staff Selection Commission) நடத்தும் ஆட்சேர்ப்பு தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம்சாட்டி மாணவர்கள் 3-வது நாளாக காலவரையற்ற சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்வுகளில் வினாத்தாள் கசிவு, நடைமுறை குறைபாடுகள் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாத ஆட்சேர்ப்பு செயல்முறைகள் குறித்து மாணவர்கள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இதனால், ஆட்சேர்ப்பு வாரியங்களின் செயல்பாடுகளில் முழுமையான வெளிப்படைத்தன்மை கொண்டு வர வேண்டும் என்றும், தேர்வு முறையில் சீர்திருத்தங்களை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், மாணவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு விரைவில் தீர்வு காண வேண்டும் என்ற அழுத்தமும் அதிகரித்து வருகிறது.



























