தமிழகத்தில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்திற்கு புதிய ஆளுநர் நியமனம் – மகாராஷ்டிரா ஆளுநர் மாற்றம் எதிரொலி!!
மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராக இருந்த பகத்சிங் கோஷ்யாரி பதவி விலகியதைத் தொடர்ந்து ரமேஷ் பயாஸ் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் ரமேஷ் பயாஸ் ஏற்கெனவே ஜார்கண்ட் கவர்னராக இருந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்துக்கு புதிய ஆளுநராக தமிழகத்தை சேர்ந்த சி. பி. ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய ஆளுநர்:
மகாராஷ்டிரா ஆளுநராக இருக்கும் பகத் சிங் கோஷாரி சில நாட்களுக்கு முன்னதாக பதிவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவர் ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கி இருந்ததால் ராஜினாமா செய்ய இருப்பதாக அறிவித்தார். அவருடைய அறிவிப்பை குடியரசு தலைவர் முர்மு ஏற்றுக் கொண்டார். இதனை அடுத்து வெளியான அறிக்கையில், மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங்கின் ராஜினாமா ஏற்கப்படுவதாகவும், அவருக்கு பதில் ரமேஷ் பயாஸ் நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டது.
2023 மதுரை சித்திரை திருவிழா – மே – 5 கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!
Follow our Instagram for more Latest Updates
மகாராஷ்டிர ஆளுநராக பதவியேற்றுள்ள ரமேஷ் பயாஸ் ஏற்கெனவே ஜார்கண்ட் கவர்னராக இருந்தவர். அவர் மகாராஷ்டிராவுக்கு மாற்றப்பட்டிருப்பதால் ஜார்கண்ட் மாநிலத்துக்கு புதிய ஆளுநராக தமிழக பாஜகவைச் சேர்ந்த சி. பி. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இப்போது ராஜினாமா செய்துள்ள பகத் சிங் கோஷ்யாரி அரசியல் பொறுப்புகளில் ஓய்வு பெற்று எழுத்து, வாசிப்பு ஆகியவற்றில் எஞ்சிய காலத்தை செலவிட உள்ளதாகக் கூறியிருக்கிறார்.
இதேபோல லடாக் யூனியன் பிரதேசத்தின் ஆளுநராக இருந்த ராதா கிருஷ்ணன் மாத்தூர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அது மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பீகார், அசாம், இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், சிக்கிம், மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் புதிய ஆளுநர்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமனம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Exams Daily Mobile App Download