JEE அட்வான்ஸ் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு ஏப்.21 முதல் துவக்கம் – அறிவிப்பு வெளியீடு!!
JEE அட்வான்ஸ் தேர்வுக்கு ஏப்.21 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனவும், தேர்வு மே 26 ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
JEE அட்வான்ஸ் தேர்வு:
IIT, NIT உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் உயர்கல்வியை தொடர்வதற்கான JEE மேம்பட்ட தேர்வு மே 26 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இளங்கலை பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இந்த JEE அட்வான்ஸ் தேர்வுக்கு ஏப்ரல் 21 முதல் விண்ணப்பிக்கலாம். மேலும், JEE மெயின் தேர்வில் முதல் 2.5 லட்சத்தில் ரேங்க் எடுத்த மாணவர்கள் jeeadv.ac.in என்கிற இணையதள பக்கத்தின் மூலமாக ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
இரயில்வேயில் காத்திருக்கும் Apprentices வேலை – 1832 காலியிடங்கள் || தேர்வு கிடையாது!
அதாவது, JEE அட்வான்ஸ் தேர்வுக்கான முதல் தாள் மே 26 ஆம் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், இரண்டாம் தாள் 2.30 மணி முதல் 5.30 மணி வரையிலும் நடைபெற இருக்கிறது. இதனையடுத்து, JEE அட்வான்ஸ் தேர்வு முடிவுகள் ஜூன் 9 ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.