ஜன.25 & 26ம் தேதி மதுக்கடைகள் மூடல் – அரசு அதிரடி உத்தரவு!

0
ஜன.25 & 26ம் தேதி மதுக்கடைகள் மூடல் - அரசு அதிரடி உத்தரவு!

தமிழகத்தின் தலைநகரில் இரண்டு நாட்கள் தொடர்ந்து மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

மதுக்கடைகள் மூடல்:

இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைத்த தேச தலைவர்களின் முக்கிய தினங்கள் அல்லது முக்கிய பண்டிகை தினங்களில் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், சென்னையின் மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ஜனவரி 25ஆம் தேதி வியாழக்கிழமை வடலூர் ராமலிங்க வள்ளலார் நினைவு நாள் மற்றும் ஜனவரி 26 வெள்ளிக்கிழமை குடியரசு தினம் வரவுள்ளது.

இந்த இரண்டு நாட்களையும் முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுக்கூடங்கள், கிளப்புகள், ஹோட்டல்களை சார்ந்த மதுக்கூடங்கள் ஆகிய அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை மீறி இந்த நாட்களில் செயல்படும் மதுபான கடைகள், சில்லறை விற்பனை கடைகள், கிளப்புகள் மீது அரசு சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!