அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட் .. தீபாவளி போனஸ்? – மத்திய அரசின் முடிவு!
மத்திய அரசு ஊழியர்கள் தங்களது அடுத்த அகவிலைப்படி உயர்வினை எதிர்பார்த்து வரும் நிலையில், வரப்போகும் தீபாவளி பண்டிகையை ஒட்டி இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
தீபாவளி போனஸ்:
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வானது ஆண்டிற்கு இரண்டு முறை அறிவிக்கப்படுகிறது. நடப்பு ஆண்டிற்கான இரண்டாவது அகவிலைப்படி உயர்வு தற்போது வரை அறிவிக்கப்படவில்லை. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் இதற்கான அறிவிப்பை எதிர்நோக்கி உள்ளனர். மத்திய அரசின் அறிவிப்பிற்கு பிறகு தான் மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வினை அளிப்பார்கள்.
இந்நிலையில், வரும் அக்டோபர் மாத இறுதியான 24ம் தேதி அன்று நடப்பு ஆண்டில் தீபாவளி பண்டிகை வர உள்ளது. நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் பண்டிகையான தீபாவளி பண்டிகையை ஒட்டி மத்திய அரசு போனஸ் மற்றும் ஊதிய உயர்வினை பற்றிய அறிவிப்பினை வெளியிடுவது வழக்கம். தற்போது வெளியான தகவலின் படி, இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 8 வரை விடுமுறை – தொடக்க கல்வி இயக்குனர் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இந்த கூட்டத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு மற்றும் தீபாவளி போனஸ் பற்றிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் புதிதாக அமலாக உள்ள திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. இன்றைய ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தீபாவளி போனஸ் மற்றும் அகவிலைப்படி உயர்வு குறித்த தகவல்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்