தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 8 வரை விடுமுறை – தொடக்க கல்வி இயக்குனர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 8 வரை விடுமுறை - தொடக்க கல்வி இயக்குனர் அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 8 வரை விடுமுறை - தொடக்க கல்வி இயக்குனர் அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 8 வரை விடுமுறை – தொடக்க கல்வி இயக்குனர் அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் செப்.30 ஆம் தேதிக்குள் நடந்து முடிய உள்ள நிலையில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அக். 8 ஆம் தேதி வரை விடுமுறை நீடிக்கப்படுவதாக முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தொடக்க கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்.

காலாண்டு விடுமுறை:

தமிழகத்தில் செயல்பட்டு வரும் பள்ளிகளில் இந்த ஆண்டு வழக்கம் போல காலாண்டு தேர்வு நடைபெற இருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது காலாண்டு தேர்வு குறித்த அறிவிப்பில் பள்ளிக்கல்வித்துறை மாற்றம் ஒன்றை செய்துள்ளது. அதன் படி அனைத்து பள்ளிகளிலும் பொது காலாண்டு தேர்வு கிடையாது எனவும், அனைத்து பள்ளிகளும் காலாண்டு தேர்வை நடத்தி செப். 30 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் காலாண்டு தேர்வு விடுமுறை குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அது குறித்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில் தொடக்க கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படும் அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அக். 8 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் “இம்முறையில்” பணியமர்த்துதல் திட்டம்? மத்திய அரசின் முக்கிய அறிவுறுத்தல்!

Exams Daily Mobile App Download

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அக்டோபர் 6 முதல் 8 ஆம் தேதி வரை ஒன்றிய அளவில் பயிற்சி நடத்தப்பட இருக்கிறது என்பதால், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக். 8 ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகள் அக். 6 ஆம் தேதி முதல் வழக்கம் போல பள்ளிக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதை அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!