பொதுத்துறை வங்கிகளில் “இம்முறையில்” பணியமர்த்துதல் திட்டம்? மத்திய அரசின் முக்கிய அறிவுறுத்தல்!
இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளின் கிளை நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டை விட அதிகரித்துள்ளது. ஆனால் பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதனால் இதனை அதிகப்படுத்தும் விதமாக ஒன்றிய அரசு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது.
பணியமர்த்துதல் திட்டம்
இந்தியா முழுவதும் 10 ஆண்டுகளுக்கு முன்பு பொதுத்துறை வங்கிகளுக்கு சுமார் 67,466 வங்கி கிளைகள் இருந்தது. அப்போது பணியாளர்களின் எண்ணிக்கை 7,76,000 ஆக இருந்தது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு பொதுத்துறை வங்கிகளுக்கான கிளைகள் 28% அதிகரித்து 86,311 கிளைகளாக அதிகரித்துள்ளது. ஆனால் பொதுத்துறை வங்கிகளின் பணியாளர்களின் எண்ணிக்கை 7,71,000 என கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது குறைந்துள்ளது. அதாவது அலுவலக பணியாளர்களின் எண்ணிக்கையும் 13%, இதே போல் கீழ்நிலை பணியாளர்களின் எண்ணிக்கையும் 27% சரிந்துள்ளது.
ஆனால் அதே சமயம் அதிகாரிகளின் எண்ணிக்கை 26% அதிகரித்துள்ளது. அதனால் பொதுத்துறை வங்கிகளின் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே பொதுத்துறை வங்கிகளின் தலைமை நிர்வாகிகளுடன் ஒன்றிய நிதியமைச்சகம் கூட்டம் ஒன்றை நடத்தியது. இதில் பணியமர்த்துவதை தீவிரப்படுத்தல், மாதாந்திர பணியமர்த்துதல் திட்டம் உள்ளிட்டவை தொடர்பாக அறிக்கை தயார் செய்து சமர்பிக்குமாறும் ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு முக்கிய அறிவுறுத்தல் – அமைச்சர் அறிக்கை!
Exams Daily Mobile App Download
மேலும் நாட்டில் வேலைவாய்ப்பின்மை தவிர்க்கும் பொருட்டு ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக ஒன்றிய நிதியமைச்சகம் பொதுத்துறை வங்கிகளுக்கு மாதாந்திர பணியமர்த்துதல் திட்டத்தை செயல்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் பாரத பிரதமர் மோடி அவர்கள் அனைத்து அரசு துறைகளிலும் இந்த வருடத்தில் சுமார் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதனால் நாட்டில் வேலைவாய்ப்பின்மை என்பது குறைய வாய்ப்பு உள்ளது தெரிகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்