மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் 5% அகவிலைப்படி (DA) உயர்வு? ஜாக்பாட் அறிவிப்பு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் 5% அகவிலைப்படி (DA) உயர்வு? ஜாக்பாட் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் 5% அகவிலைப்படி (DA) உயர்வு? ஜாக்பாட் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் 5% அகவிலைப்படி (DA) உயர்வு? ஜாக்பாட் அறிவிப்பு!

நாட்டின் உயர் பணவீக்கம் காரணமாக, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (டிஏ) உயர்வு வழங்கப்படும், இது இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும். ஊடக அறிக்கையின்படி, டிஏ அதிகரிப்பு சுமார் 5 சதவீதமாக இருக்கும் என தகவல்கள் கூறுகிறது.

அகவிலைப்படி (DA) உயர்வு:

கொரோனா காலகட்டத்தில் நிறுத்திவைக்கப்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு டிஏ மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) , ஜூலை 2021 இல், முறையே 28 சதவீதம் மற்றும் 17 சதவீதமாக உயர்த்தப்பட்டது. மேலும் அக்டோபர் 2021 இல், மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படியில் 3 சதவீதம் உயர்வு பெற்றனர். பின்னர், ஜூலை 2021 முதல், மத்திய அரசு ஊழியர்களுக்கான DA 31 சதவீதமாக அதிகரித்தது. இதையடுத்து 7வது ஊதியக்குழு, மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏவை ஜனவரி 2022ல், 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

TN Job “FB  Group” Join Now

2022 ஜனவரி மாதத்தில் அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (ஏஐசிபிஐ) 125.1 புள்ளிகளாக இருந்தது. அது பிப்ரவரி மாதத்தில் மேலும் சரிந்து 125 க்கு வந்தது. இதன் அடிப்படையில் மார்ச் மாதத்திலும் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1 புள்ளி மட்டும் உயர்ந்து 126 க்கு வந்தது. மேலும் ஜனவரி முதல் ஜூன் வரையிலான அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படையில் அடுத்த அகவிலைப்படி உயர்வு இருக்கும் .ஜூலை மாதத்தில் அகவிலைப்படி 5 சதவீதம் வரை உயர வாய்ப்பு உள்ளது. அவ்வாறு உயர்ந்தால், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 39 சதவீதமாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – புதிய கல்வியாண்டிற்கான நாட்காட்டி வெளியீடு!

மேலும் சில அரசு ஊழியர்களுக்கான அடிப்படை கருணைத் தொகை கடந்த மாதம் 368 சதவீதத்தில் இருந்து 381 சதவீதமாக அதிகரித்துள்ளது. பணியாளர்கள், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகத்தின் அறிக்கையின்படி, இது நவம்பர் 18, 1960 மற்றும் டிசம்பர் 31, 1985 க்கு இடையில் வேலையில் இருந்து ஓய்வு பெற்ற CPF பயனாளிகளுக்கானது. இந்த வகையில் “18.11.1960 மற்றும் 31.12.1985 க்கு இடையில் பணியில் இருந்து ஓய்வுபெற்ற CPF பயனாளிகள் மற்றும் குரூப் A, B, C, மற்றும் D க்கு ரூ. 3,000, ரூ. 1,000, ரூ. 750 மற்றும் ரூ. 650 அடிப்படைக் கருணைத் தொகைக்கு உரிமையுடையவர்கள் ஆகும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!