தமிழகத்தில் நாளை (ஜூன் 14) மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
சிவகாசி கோட்டத்திற்கு உட்பட்ட பாறைப்பட்டி, சிவகாசி, நாரணாபுரம் உள்ளிட்ட மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (ஜூன் 14) ஆம் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்பட்டுள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மாதம் ஒரு முறை நடைபெற்று வருகின்றன. எந்த மாவட்டங்களில் மின்தடை செய்யப்படுகிறார்களோ அந்த பகுதிகளில் முன்கூட்டியே மக்களுக்கு மின் வாரியம் தெரியப்படுத்துகிறது. அதாவது அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நாளில் மின் தடை செய்ய முடியாது. ஆகையால், பழுது பார்க்க உள்ள இடங்களில் மட்டும் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
அதாவது, பெரும்பாலான பகுதிகளில் மின்னணு சாதனங்களில் கோளாறு, மின்கசிவு, மின் பாதைகளில் ஏற்படும் பாதிப்புகள், மின்னணு துண்டிப்பு ஆகியவை ஏற்படுவதால் எதிர்பாராத விதமாக மின் விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும், மரக் கிளைகளை அகற்றுதல் மற்றும் மரக்கிளைகளில் உரசும் கிளைகளை அகற்றுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மின் கசிவு மற்றும் மின் இணைப்பு துண்டிப்பை சரி செய்யும் ஊழியர்கள் அனைவரும் தகுந்த முன் ஏற்பாடுகளுடன் பணிகளை செய்கின்றன.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் 5% அகவிலைப்படி (DA) உயர்வு? ஜாக்பாட் அறிவிப்பு!
ஆதலால், சிவகாசி உட்பட்ட காமராஜபுரம் காலனி, 56 வீட்டு காலனி, ஐஸ்வர்யா நகர், அரசன் நகர், சீனிவாச நகர், பர்மா காலனி, மாரியம்மன் கோவில், ஜக்கம்மா கோவில், பஸ் நிலையம், அண்ணா நகர், காரனேசன் காலனி, பழனியாண்டவர் காலனி, நேரு ரோடு, பராசக்தி காலனி, வடக்குரதவீதி, வேலாயுதம் ரோடு, அண்ணா காலனி, போஸ் காலனி, முத்துராமலிங்க நகர், இந்திரா நகர், முருகன் காலனி, எம்.ஜி.ஆர்.காலனி, மீனாட்சி காலனி, நாரணாபுரம் ரோடு விஸ்வநத்தம், பாரப்பட்டி, பள்ளப்பட்டி, லிங்கபுரம் காலனி, ராஜீவ் காந்தி நகர், அம்மன் நகர், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என சிவகாசி மின் செயற்பொறியாளர் பாபநாசம் தெரிவித்திருக்கிறார்.