இஸ்ரேல் பாலஸ்தீனம் போர்.. தமிழர்களை காக்க நடவடிக்கை – அரசு தகவல்!
இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், அங்கு சிக்கி இருக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
அரசு தகவல்
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. கடந்த 7 ஆம் தேதி நடைபெற்ற ஏவுகணை தாக்குதல் காரணமாக தற்போது கடுமையான போர் சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் அங்கு தமிழர்கள் பலர் சிக்கி இருக்கின்றனர். அவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து இருப்பதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் உதவி தேவைப்படுவோர் [email protected] , [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
தமிழகத்தில் வாகன ஓட்டிகள் கவனத்திற்கு – இனி இப்படி செய்ய கூடாது.. காவல்துறை முக்கிய எச்சரிக்கை!
அது மட்டுமில்லாமல் அயலக தமிழர் நலத்துறையின் 8760248625, 9940256444, 9600023654 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும் தமிழர்களை உடனே மீட்டு தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதாகவும், இஸ்ரேலில் உள்ள தமிழர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.